இலங்கையில் பத்தாயிரத்தை தாண்டியது கொரோனா மரணங்கள்!!

696

கொரோனா..

நாட்டில் நேற்றைய தினம் (04.09.2021) கோவிட் தொற்றினால் 189 பேர் மரணமடைந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன்,

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையிலேயே இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 10140ஆக அதிகரித்துள்ளது.

இன்று இதுவரையில் 3,308 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 462,767 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கோவிட் தொற்றிலிருந்து மேலும் 2,081 பேர் குணமடைந்துள்ளனர்.