நேற்று (30.03) காலை வவுனியா மதீனாநகர் பகுதியில் உள்ள கிணறொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட இச் சடலமானது மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன அப்பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான 26 வயது இளைஞர் ஒருவருடையது என்றும். இவர் காணமல் போனமை தொடர்பாக உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இம் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.