தனியாக இருந்த சிறுமியிடம் அத்துமீறிய நபர் : கோபத்தில் மக்கள் செய்த செயல்!!

860

தமிழகத்தில்..

தமிழகத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை கிராம மக்கள் அடி வெளுத்த நிலையில் மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த மாதம் அந்த கிராமத்தை சேர்ந்த சிறுமி தனியாக இருக்கும் போது பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

இதையறிந்து கொதித்து போன ஊர் மக்கள் மணிகண்டனை பிடித்து கட்டி வைத்து அடித்து துவைத்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சிகிச்சைக்குப் பிறகு ஊர் திரும்பிய மணிகண்டனை பொலிசார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது காவல் நிலையத்திற்குள் நுழையும்போதே மணிகண்டன் உடல்நிலை மோசமானது. இதையடுத்து பொலிசார் அவரை மேல் சிகிச்சைகாக நாமக்கல் கொண்டு சென்ற நிலையில் மணிகண்டன் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.