சமையலறையில் புதைந்து கிடந்த கைவிரல்கள் : தோண்டிய பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

1338

கேரளாவில்..

கேரளாவில் பெண் ஒருவர் கொலை செய்து சமையலறையில் புதைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள அடிமாலி பகுதியில் வசித்து வருபவர் சிந்து(45).

இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார். இவரும் அவரது கணவரும் கருத்து வேறுபாட்டால் பல ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சிந்துவை கடந்த மாதம் 12ஆம் திகதி முதல் காணவில்லை. இதுகுறித்து சிந்துவின் மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் அக்கம் பக்கத்தில் விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது அவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் பினோய் என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் பிரிந்த கணவரை அடிக்கடி சிந்து சந்தித்து வந்துள்ளார்.

இது பினோய்க்கு பிடிக்காததால் இனிமேல் கணவரை சந்திக்க கூடாது என்று எச்சரித்துள்ளார். எனவே பொலிசார் பினோய் மீது சந்தேகப்பட்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு சமையலறையில் புதிதாக குழி தோண்டப்பட்டு மணல்கள் சிதறி கிடந்தன. இதையடுத்து அங்கு தோண்டி பார்த்த பொழுது சிந்துவின் கைவிரல்கள் தென்பட்டுள்ளது.

பிறகு சிந்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பினோய் தலைமறைவாகி விட்டார். இதனையடுத்து பினோய் மீது பொலிஸ் வழக்கு பதிவு செய்து வலை வீசி தேடி வருகின்றனர்.