வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 5 பேர் மரணம்!!

2672

கொரோனா..

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக 5 பேர் நேற்று (05.09.2021) மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் பலரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன், இறப்புக்களும் அதிகரித்து வருகின்றது.

கொரோனா தொற்று காரணமாக மகாறம்பைக்குளம் பகுதியில் (வயது 77) பெண் ஒருவரும், தவசிகுளம் பகுதியில் (வயது 57) ஆண் ஒருவரும், சிறிநகர் பகுதியில் (வயது 77) பெண் ஒருவரும், பட்டானிச்சூர் பகுதியில் (வயது 44) ஆண் ஒருவரும், தோணிக்கல் பகுதியில் (வயது 74) ஆண் ஒருவரும் என 5 பேர் மரணமடைந்துள்ளனர்.

மரணமடைந்த 5 பேரினது சடலங்களையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்கு சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.