வவுனியாவில் குளத்தில் மூழ்கி இரு பெண்கள் உட்பட மூவர் பலி!!

507

1

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற படகு விபத்தில் இரு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

நேற்று காலை வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு யுவதிகளும் இரு இளைஞர்களும் மாமடு குளத்தினை பார்ப்பதற்காக சென்றுள்ளனர்.பின்னர் படகு சவாரி செய்ய விரும்பிய இவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்தும் சிறிய வள்ளத்தில் ஏறி நீரில் செல்ல முற்பட்டபோது வள்ளம் கவிழ்ந்ததில் நீரிழ் மூழ்கியுள்ளனர்.

எனினும் இவர்களில் இரு யுவதிகளும் ஒரு இளைஞனும் ஒருவாறு நீந்திக் கரை சேர்ந்த நிலையில் இரு யுவதிகளும் ஒரு இளைஞனும் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

பலியானவர்கள் விநாயகபுரத்தைச் சேர்ந்த என்.சங்கீதா(26), கற்குழியைச் சேர்ந்த ஜோசப் ஜென்சி(26), திருநாவற்குளத்தைச் சேர்ந்த எஸ்.உசாந்(20) ஆகியோரே என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2