கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

1116

கொரோனா..

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி நேற்றைய தினம் (05-09-2021) 180 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதில் 30 வயதுக்கும் குறைந்தவர்கள் 7 பேரும், 30 முதல் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் 40 பேரும், 60 வயதுக்கும் மேற்பட்ட 133 பேரும் உயிரிழந்துள்ளனர்.

நேற்றைய தினம் உயிரிழந்தவர்களில் 97 ஆண்களும் 83 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இதன்படி நாட்டில் இதுவரையில் கோவிட் காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 10320 ஆக உயர்வடைந்துள்ளது.