41 வயது நபரை காதலித்த 23 வயது பெண் : வாட்ஸ் அப்பில் வந்த புகைப்படத்தை பார்த்த அதிர்ச்சியில் உயிரை விட்ட பெற்றோர்!!

1298

தமிழகத்தில்..

தமிழகத்தில் காதலனுடன் ரகசிய திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் மகள் அனுப்பிய நிலையில் மனவேதனையில் பெற்றோர் த.ற்கொலை செ.ய்து கொண்டுள்ளனர்.

திருப்பூரை சேர்ந்த பொன்னுசாமி – சுமதி தம்பதியின் மகள் ஜனனி (23) கோவையிலுள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பிசியோதெரபி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். ஜனனிக்கும் உறவினர் முறை உள்ள அதே பகுதியை சேர்ந்த சம்பத் (41) என்பவருக்கும் இடையே காதல் இருந்து வந்துள்ளது.

ஜனனியின் காதலுக்கு அவரது பெற்றோர்கள் எ.திர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். கொரோனா தொற்று ஊரடங்கால் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த ஜனனி செய்வதறியாமல் தவித்து வந்துள்ளார்.

தற்போது அரசு அறிவித்த தளர்வுகளால் மீண்டும் கல்லூரி திறக்கப்பட்டது. இதை நல் வாய்ப்பாக நினைத்த ஜனனி கோவையில் சம்பத்தை நேற்று திருமணம் செய்துள்ளார். நீண்ட நேரமாக ஜனனி வீட்டுக்கு திரும்பாததால் பதறிப்போன பெற்றோர் அவருக்கு பல முறை போனில் தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆனால் இவர்கள் அழைப்புகளை ஏற்காத ஜனனி இரவு தனது தந்தையின் வாட்ஸ் அப்பிற்கு தனது காதலனுடன் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்து தாங்கள் திருமணம் செய்து கொண்டதற்கான போட்டோவையும் அனுப்பி வைத்துள்ளார்.

இதனை பார்த்து அ.திர்ச்சியும் மனவேதனையும் அடைந்த ஜனனியின் பெற்றோர், பார்த்து பார்த்து வளர்த்த ஒரே மகள் தங்களை நிராகரித்து விட்டு தனியாக முடிவெடுத்து திருமணம் செய்து கொண்டாளே என உடைந்து போனார்கள்.

இதையடுத்து த.ற்கொலை செ.ய்ய முடிவெடுத்து வாழைப்பழத்தில் வி.ஷ மாத்திரையை வைத்து சாப்பிட்டுவிட்டு, தூ.க்கு மா.ட்டிக்கொள்ள தயாரான நிலையில், விஷ மாத்திரையின் வீரியத்தால் ம.யக்கமடைந்து விழுந்து உ.யிர் அப்படியே பிரிந்துள்ளது.

பின்னர் அங்கு வந்த உறவினர்கள், இருவரும் ச.டலமாக கி.டப்பதை கண்டு அ.திர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதங்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.