வவுனியாவில் கொரோனா தொற்றால் மேலும் மூவர் மரணம்!!

2206

கொரோனா..

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக நேற்று (06.09.2021) மூன்று பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த வெளிக்குளம் பகுதியில் (வயது 52) பெண் ஒருவரும், வைரவபுளியங்குளம் பகுதியில் (வயது 85) ஆண் ஒருவரும்,

கோவில்புதுக்குளம் பகுதியில் (வயது 91) பெண் ஒருவரும் என 3 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில் மரணித்த 3 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் 54 வயது ஆண் ஒருவரும் நேற்று முன்தினம் (05.09.2021) இரவு மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.