காதலிக்கும் பெண்ணை வசியம் செய்து தருவதாக அண்டா சாமியார் செய்த செயல்!!

1008

தமிழகத்தில்..

தமிழகத்தில், பொது மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் போலி அண்டா சாமியாரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளத்தை சேர்ந்தவர் சக்தி என்கின்ற முனீஸ்வரன்(37). அதே பகுதியில் சக்தி வாராகி என்ற ஜோதிட நிலையத்தை நடத்தி வருகிறார்.

இவர் மேல் பெண் ஒருவர் பண மோசடி வழக்கு கொடுத்ததையடுத்து பொலிசார் அதிரடியாக கைது செய்து தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் குறித்து பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது அவர் சக்தி என்ற பெயரில் தொலைக்காட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். விளாத்தி குளத்தை சேர்ந்த பெண் ஒருவரை தனது டிவியில் பணியாற்றும்படியும் மாத சம்பளம் 25ஆயிரம் தருவதாக ஆசை வார்த்தை கூறி அவரிடமிருந்து ஒன்றே கால் லட்சம் பணத்தை பெற்றுள்ளார்.

மேலும் அந்த பெண்ணை ஏமாற்றி 3 லட்சம் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை திருப்பி கேட்ட போது, அந்த பெண்ணிடம் பா.லியல் சீ.ண்டலில் ஈடுபட்டுள்ளார். இதை வெளியே சொன்னால் கொ.லை செ.ய்து விடுவதாக கத்தி முனையில் மிரட்டியுள்ளார்.

இது குறித்து அந்த பெண் விளாத்திகுளத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் பொலிஸார் போலி சாமியார் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த பெண் உட்பட மேலும் இரண்டு பெண்களை சக்தி ஏமாற்றியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் சிறப்பு பூஜை என்ற பெயரில் ஒரு தலையாக காதலிக்கும் இளைஞர்களிடம், காதலியை வசியப்படுத்தி தருவதாக ஏமாற்றியுள்ளார்.

பொதுமக்கள் முதல் காவல் அதிகாரிகள் வரை இவரது வலையில் சிக்கி பணத்தை இழந்துள்ளனர். மேலும் இவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.