வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி!!

2649

விபத்து..

வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் இன்று (08.09.2021 இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இன்று (08) காலை இடம்பெற்ற விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், கொழும்பிலிருந்து யாழ். நோக்கி சென்று கொண்டிருந்த கப் ரக வாகனம் கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது யாழிலிருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் கப் ரக வாகனத்தில் பயணித்த 50 வயதான குருநாகல் பகுதியைச் சேர்ந்த கே.திலக்குமார என்பவரே சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளதுடன், அதன் சாரதி கவலைக்கிடமான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

வைத்தியசாலையில் மரணமடைந்தவர் 31 வயதான கொழும்பு ஆமர் வீதியைச் சேர்ந்த சுப்ரமணியம் நிரூபன் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திற்குச் சென்ற கனகராயன்குளம் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.