வவுனியா பட்டானிச்சூர் முஸ்ஸிம் மகா வித்தியாலயத்தில் இரு நாட்களில் 738 பேருக்கு இரண்டாவது தடுப்பூசி!!

1383

தடுப்பூசி..

வவுனியா மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் கோவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன்,

வவுனியா சுகாதாரப் பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து வவுனியா சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவின் 8 நிலையங்களில் தடுப்பூசிகள் ஏற்றப்படுகின்றன.

வவுனியா முஸ்ஸிம் மகா வித்தியாலயத்தில் வைத்தியர் ஏ.அரங்கன் தலமையில் பட்டானிச்சிப்புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 60 வயதிற்கு மேற்பட்ட இரண்டாவது டோஸ் சினோபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டது.

அந்த வகையில் நேற்றையதினம் (07.09.2021) 308 பேருக்கும் இன்றையதினம் (08.09.2021) 430 பேருக்கும் என இரு நாட்களில் 738 பேருக்கு இரண்டாவது தடுப்பூசி ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.

நீண்ட நேரம் காத்திருக்க முடியாத வயோதிபர்கள் , நோயினால் அவதியுற்றவர்கள், நடக்க முடியாதவர்களுக்கு அவர்களது இடத்திற்கே சென்று தடுப்பூசிகளை சுகாதாரப் பிரிவினர் ஏற்றி வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.