வவுனியா சாந்தசோலை கிராமம் அபாய கட்டத்தில் : 43 பேருக்கு கொரோனா தொற்று!!

2786

சாந்தசோலை..

வவுனியா, சாந்தசோலை கிராமம் கொரோனா தொற்று காரணமாக அபாய நிலையை அடைந்துள்ளதுடன் கிராமத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, சாந்தசோலை கிராமத்தில் கொரோனா தொற்று அபாயம் இருப்பதாக கிராமத்தின் பொது அமைப்புக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக சுகாதார பிரிவினரால் கடந்த சனிக்கிழமை (04.09.2021) சாந்தசோலை கிராமத்தில் அன்டிஜன் மற்றும் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி, நோய் அறிகுறி காணப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

மேலதிகமாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் நேற்று (08.09) இரவு வெளியாகின. அதில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி குறித்த கிராமத்தில் 43 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

கொரோனா அபாயமுள்ள கிராமாக குறித்த கிராமம் காணப்படுவதால் பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.