தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுமா? இன்று முடிவு!!

1085

ஊரடங்கு..

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு குறித்து, இன்று (10.09.2021) முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கொரோனா செயலணியை இன்று சந்திக்கிறார். இதன்போது, தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை நீக்குவது அல்லது நீடிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

ஏற்கனவே அமுலில் உள்ள உத்தரவின்படி, செப்டம்பர் 13 திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.