வவுனியாவில் இராணுவத்தின் உதவியுடன் ஓய்வூதியக் கொடுப்பனவுகள்!!

1136

ஓய்வூதியக் கொடுப்பனவுகள்..

வவுனியா மாவட்டத்தில் இராணுவத்தின் உதவியுடன் ஓய்வூதியம் பெறும் முதியவர்களுக்கு இன்று (10.09) ஓய்வூதியக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டது.

கொரோனா பரம்பல் காரணமாக நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ளதால் முதியவர்கள் தமது ஓய்வூதியத்தை வங்கிகளுக்கு சென்று பெற முடியாத நிலை காணப்பட்டது.

இந்நிலையில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன.

இராணுவத்தின் ஏற்பாட்டில் பேரூந்துகள் மற்றும் பிக்கப் வாகனங்களில் வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஓய்வூதியம் பெறுவர்கள் வவுனியா நகரப்பகுதியில் உள்ள அரச வங்கிகளுக்கு வருகை தந்து தமது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஓய்வூதியப் பணத்தினைப் பெற்றுச் சென்றனர்.