இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 11000 ஐ கடந்தது!!

629

கொரோனா..

நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றால் 157 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 11,152 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 87 பெண்களும், 70 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் நேற்று முன்தினம் (09.09.20210 கோவிட் தொற்றினால் 131 பேர் மரணமடைந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.