இலங்கை குறித்த மத்திய அரசின் கொள்கையில் திருப்தியில்லை – பாஜக..!

974

இலங்கை குறித்த இந்திய மத்திய அரசாங்கத்தின் கொள்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

மத்திய அரசாங்கத்தின் பலவீனமான வெளியுறவுக் கொள்கைகளின் காரணமாக இலங்கையுடனான உறவுகளில் விரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் யஸ்வந்த் சிங் சுட்டிக் காட்டியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு மற்றும் அடையாளத்திற்கான அச்சுறுத்தல் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ஜவஹல்லால் நேருவின் எல்லை தொடர்பான கொள்கைகளினால் பாகிஸ்தானுடனும், சீனாவுடனும் முறுகல் நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சுதந்திரம் கிடைக்கப் பெற்று 66 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இந்தியா எல்லை நிர்ணயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.