பல சிறுமிகளை ஏமாற்றி பலாத்காரம் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை!!

307

Abuseமகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தின் ரன்ஷேத் படா பகுதியைச் சேர்ந்தவர் 45 வயதான ரமேஷ். இவர்களை சிறுமிகளை மயக்கி, பாலியல் பலாத்காரம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அவ்வாறு நடந்து கொள்ளும் விஷயத்தை வெளியே சொன்னால், உன்னையும் உன் அப்பா- அம்மாவையும் கொன்று விடுவேன் என்றும் பாதிக்கப்பட்ட சிறுமிகளை, இவர் மிரட்டி அனுப்புவதுண்டு.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 17ம் திகதி, தனது பண்ணை வீட்டில் ஒரு சிறுமியிடம் இவன் தகாத முறையில் நடந்து கொண்டபோது, அதை நேரில் பார்த்த ஒருவர் ஊர் மக்களிடம் தெரிவித்தார். இதன்மூலம் அந்தரங்கமாக அரங்கேறி வந்த ரமேஷின் கொடூரங்கள் வெளிவந்தன.

ஊர் மக்கள் அளித்த புகாரையடுத்து அவனை கைது செய்து, பொலிஸார் நடத்திய விசாரணையில் 12-15 வயதுக்குட்பட்ட 5 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளமை தெரியவந்தது.

இது தொடர்பாக, தானே மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.