கணவன் கடத்தப்பட்டதாக நம்பிய மனைவிக்கு இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!!

756

இந்தியாவில்…

இந்தியாவில் கடத்தப்பட்டதாக கருதப்பட்ட கணவன் வேறொரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்த சம்பவத்தை அறிந்து மனைவி கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். ஒடிசாவின் Bhubaneswar பகுதியை சேர்ந்தவர் Patitapaban Prusty.திருமணம் ஆன இவர் ஆன்லை உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சனிக் கிழமை Patitapaban Prusty கடத்தப்பட்டுவிட்டதாக அவரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து பொலிசார் இந்த சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட Patitapaban Prusty மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் Katia இரயில் நிலையத்தில் பெண் ஒருவருடன் இருப்பது தெரியவந்தது.

அதன் பின் பொலிசார் பிடித்து விசாரித்த போது, இருவரும் காதலித்து வருவதாகவும், குடும்பத்தை விட்டு வேறொரு பகுதிக்கு சென்று ஒன்றாக சேர்ந்து வாழ திட்டமிட்டிருப்பதும் தெரியவந்தது.

இவருடன் ஓட்டம் பிடித்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் Patitapaban Prusty கடத்திச் சென்றுவிட்டதாக புகார் அளித்துள்ளனர். இதனால் இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவன் கடத்தப்பட்டுவிட்டதாக பதறி போய் புகார் அளித்த மனைவி, அவர் வேறொரு பெண்ணுடன் ஓட்டம் பிடிக்க திட்டமிட்டிருப்பதை அறிந்து கடும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் உள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.