2 சிறுவர்களின் வங்கி கணக்கில் 900 கோடி ரூபா பணம் : அதிர்ந்துபோன கிராம மக்கள்!!

2462

இந்தியா..

இந்தியாவில் 6-ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுவர்களின் வங்கி கணக்கில் கோடிக்கணக்கான பணம் வரவு வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, அந்த கிராமத்தில் வசிக்கும் மற்றவர்களும் தங்கள் வங்கிக்கணக்கு அறிக்கையை சரிபார்க்க ஏடிஎம்கள் மற்றும் வங்கிகளுக்கு விரைந்தனர். இந்திய மாநிலம் பீகாரின் கதிஹாரில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அப்பகுதியில் வசிக்கும் இரண்டு 6-ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள், பள்ளி சீருடையை வாங்குவதற்கும் அது தொடர்பான செலவுகளுக்கும் அரசாங்கத் திட்டத்தின் கீழ் சிறிது பணம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர்.

அந்த உதவித்தொகை தங்கள் வங்கி கணக்கு வந்துவிட்டதா என்பதை பார்ப்பதற்காக அவர்கள் தங்கள் பெற்றோருடன் சேர்ந்து, கிராமத்தில் உள்ள ஒரு பொது இணைய மையத்திற்கு சென்று சோதித்தனர். அப்போது, அவர்களின் அறிக்கையை சரிபார்த்தபோது, ​​அவர்கள் கணக்கில் பல கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அதில், ஆஷிஷ் (Ashish) என்ற சிறுவனின் கணக்கில் ரூ. 6.2 கோடியும், மற்றோரு சிறுவன் சரன் விஸ்வாஸின் (Guru Charan Vishwas) கணக்கில் நமபமுடியாத அளவில் ரூ. 900 கோடி இருந்துள்ளது.

இந்த விடயம் வெளியே தெரிந்ததும், கிராமத் தலைவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இந்த வங்கி பரிவர்த்தனை தொடர்பாக உரிய அதிகாரிகள் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், இதேபோல் பீகாரில் மற்றோரு சமத்துவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. அதில், பாட்னாவின் புறநகரில் உள்ள ஒரு கிராமத்தில் ஒருவர் தவறுதலாக அவரது கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ. 5 லட்சத்திற்கு மேலான பணத்தை திருப்பித் தராததால் சிறைக்கு அனுப்பப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிய அரசு நிவாரணம் என்று கூறி அந்த நபர் வங்கிக்கு பணத்தை திருப்பி தர மறுத்துவிட்டார்.