கொழும்பு தாமரை கோபுரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

1186

தாமரை கோபுரம்..

உலக நோயாளர்கள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டும், சுகாதார துறையை சேர்ந்த அனைவரையும் கௌரவிக்கும் முகமாகவும் கொழும்பு தாமரை கோபுரத்தில் மின்விளக்குகள் ஒளிரவிடப்பட்டுள்ளன.

அதற்கமைய, இன்றைய தினம் மாலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை இவ்வாறு மின்விளக்குகள் ஒளிரவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்ட தாமரை கோபுரம் கொழும்பு மத்திய பகுதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.