வவுனியாவில் திறக்கப்படட மதுபானசாலைகள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டன!!

1994

மதுபானசாலைகள்..

வவுனியாவில் திறக்கப்பட்டு சுகாதார நடைமுறைகளின்றி வியாபாரத்தில் ஈடுபட்ட 4 மதுபானசாலைகள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டன.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் சில மதுபானசாலைகள் நேற்று (17.09) மாலை திறக்கப்பட்டன.

அந்தவகையில், வவுனியாவில் சில மதுபானசாலைகள் திறக்கப்பட்டமையால் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தையும் மீறி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மதுபானசாலைகள் முன்பாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது திரண்டு இருந்தனர்.

இதனையடுத்து சுகாதாரப் பிரிவினர் குறித்த மதுபான சாலைகளை மூடுமாறு பணித்துடன், அங்கு நின்றவர்களையும் பொலிசாரின் உதவியுடன் வெளியேற்றினர்.

அத்துடன், சுகாதார நடைமுறைகளைப் பேணாது வியாபாரத்தில் ஈடுபட்ட வவுனியா நகரில் கண்டி வீதியில் உள்ள மதுபானசாலை, பூவரசன்குளம் பகுதியில் உள்ள மதுபானசாலை, ஓமந்தையில் உள்ள மதுபானசாலை, மரக்காரம்பளையில் உள்ள மதுபானசாலை என 4 மதுபானசாலைகள் தனிமைப்படுத்தல் நோட்டீஸ் ஒட்டப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டன.