நாமக்கல்…
நீட் தேர்வு எழுதிவிட்டு மாணவி ஒருவர் மாயமாகிய நிலையில், இறுதியில் காதலனுடன் திருமணம் செய்துவிட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த சின்ன அரியா கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் செந்தில் பாண்டியன். இவர் நாமகிரிப்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக உள்ளார். இவரது மனைவி தங்கம்.
இவர்களுக்கு சுவேதா என்ற மகளும் ஒரு மகனும் உள்ள நிலையில், ஸ்வேதா தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு முடித்துவிட்டு கடந்த ஆண்டு நாமக்கல்லில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் நீட் பயிற்சி பெற்றுள்ளார்.
கடந்தவாரம் திருச்செங்கோட்டில் உள்ள மையத்தில் அவர் நீட் தேர்வு எழுதிவிட்டு வந்தது முதலே சோகமாக காணப்பட்டுள்ளார். ஸ்வேதாவை அவரது பெற்றோர்கள் சமாதானம் செய்துள்ள நிலையில், நேற்று காலை 11 மணியளவில் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவரைக் காணவில்லை.
இதனால் பல இடங்களில் தேடிய உறவினர்கள் பின்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் மாணவி சரணடைந்ததாக வந்த தகலையடுத்து நாமக்கல் பொலிசார் அங்கு சென்றுள்ளனர்.
விசாரணையில் காதல் விவகாரம் காரணமாக மாணவி வீட்டிலிருந்து மாயமாகியதாகவும், அவரும் அவரது காதலனும் திருமணம் செய்து கொண்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்ததும் தெரியவந்துள்ளது.