கதவை தட்டி தொல்லை கொடுக்கும் மகள் : அல்லல்ப்படும் தாய்!!

360

Mananoiஜேர்மனியில் தாய் ஒருவர் தனது மனநோயால் பாதிக்கப்பட்ட மகளை வைத்து கொண்டு பெரும் அவதிக்குள்ளாகியுள்ளார்.

ஜேர்மனின் பான் மாகாணத்தில் வசிக்கும் 82 வயது மூதாட்டி தனது மனநலம் குன்றிய மகளுடன் (57) குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார்.

இவரது மகள் தினமும் காலையில் அனைவரது வீட்டு கதவைகளையும் தட்டி, ஜன்னல்களை அடித்து சத்தம் ஏற்படுத்துவதால் பெரும் பிரச்சனையை அக்குடியிருப்பு மக்கள் சந்தித்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த குடியிருப்பில் வசிக்கும் மக்கள் இவரது தாய் மீது வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, இவர் தனது மகள் சத்தம் போடுவதை தடுக்க வேண்டும் இல்லையேல் அவரது மகளுக்கு சிறை தண்டனையை விதித்து தீர்ப்பளிக்கப்படும் என கூறியுள்ளார்

மேலும் மனநலம் குன்றிய அப்பெண்ணிற்கு விரைவாக மருத்துவ சிகிச்சை அளிக்காமல் இருந்தால், இவரது தாய் அபராதம் செலுத்தும் நிலை ஏற்படும் என உத்தரவிட்டுள்ளது.