தடுப்பூசி..
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்க திட்டமிட்டுள்ளதாக மருந்து தயாரிப்பு விநியோகம், கட்டுப்பாடு தொடர்பான,
ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அமெரிக்காவில் இருந்து ஒரு தொகை பைசர் தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அவை இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.