மீன்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து!!

1356

விபத்து..

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின், களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை முகாம் முன்பாக இன்று அதிகாலை விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை – கிண்ணியா பகுதியிலிருந்து மீன்களை ஏற்றிக் கொண்டு கல்முனை பகுதி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வாகனமே இவ்வாறு விபத்திற்கு இலக்காகியுள்ளது.

எனினும் வாகனத்தில் பயணித்த எவருக்கும் எவ்வித பாதிப்பும் நேரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.