வடகொரியாவில் உள்ள ஆண்கள் அனைவரும், அந்நாட்டின் ஜனாதிபதியை போலவே தலைமுடி அலங்காரம் செய்து கொள்ள வேண்டும் என்ற உத்தரவு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக வடகொரிய ஆண்கள் 28 விதமான தலைமுடி அலங்காரம் வைத்துக் கொள்ளவே அந்நாடு அனுமதி அளித்துள்ளது.
அந்த வகையில் இப்போது அந்நாட்டு அதிபர் கிங்ஜாங்கின் தலைமுடியை பின்பற்றுமாறு அங்குள்ள ஆண்களுக்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
இதற்கு ஒரு சில மக்கள் தங்களது தலைவரின் தலைமுடி அலங்காரம் யாருக்கும் வராது என புகழ்ந்துரைத்தாலும், இந்த அலங்காரம் அனைவருக்கும் பொருத்தமாய் அமையாது என மற்றொரு தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே அரசின் உத்தரவினை மீற முடியாமல் அந்நாட்டு மக்கள் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர்.