வவுனியாவில் மேலும் 35 பேருக்கு கொரோனா தொற்று : 21 வயதுப் பெண் உட்பட 6 பேர் மரணம்!!

2120


கொரோனா..



வவுனியாவில் மேலும் 35 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன், 21 வயது பெண் உட்பட 6 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.



வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில (21.09) காலை வெளியாகின.




அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் மேலும் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் கொரோனா தொற்று காரணமாக வவுனியாவில் நேற்றைய தினம் (20.09) 6 பேர் மரணமடைந்துள்ளனர். அட்டமஸ்கட பகுதியில் பெண் ஒருவரும் (வயது 21), தேக்கவத்தை பகுதியில் நகரசபை உறுப்பினரான பெண் ஒருவரும் (வயது 55), பம்பைமடு காப்பகம் ஒன்றில் ஆண் ஒருவரும் (வயது 78),


குருமன்காடு பகுதியில் பெண் ஒருவரும் (வயது 75), பட்டானிச்சூர் பகுதியில் ஆண் ஒருவரும் (வயது 65), ஆர்டிஎஸ் விடுதியில் ஆண் ஒருவரும் (வயது 92) என 6 பேர் மரணமடைந்துள்ளனர்.

மரணமடைந்தவர்களின் சடலங்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.