கணவனை துண்டு துண்டாக வெட்டி ஆசிட் ஊற்றிய மனைவி : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

1140

இந்தியாவில்..

இந்தியாவில் காதலன் உதவியுடன் மனைவி, கணவனை து.ண்டு து.ண்டாக வெ.ட்டி, ராசயனங்கள் ஊற்றி அழிக்க முயன்ற சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம்முசாபர்பூரில் உள்ள சிக்கந்தர்பூர் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ராகேஷ். இவருக்கும் ராதா(30) என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில், ராதாவிற்கு சுபாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட, இவர்களின் பழக்கம், நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறிவிட்டது.

இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். ஆனால், இவர்களுக்கு ராதாவின் கணவர் தொந்தரவாக இருப்பதால், ராகேஷை மனைவி ராதா கொ.லை செய்ய முடிவுசெய்துள்ளார்.

இதற்காக, ராதா தனது கணவன் ராகேஷை கொலை செய்வதற்கு தனது தங்கை கிருஷ்ணா மற்றும் தங்கை கணவரை அழைத்துக்கொண்டார். அதைத் தொடர்ந்து, சுபாஷ், ராதா, கிருஷ்ணா உள்பட 4 பேரும் சேர்ந்து ராகேஷை அடித்துக் கொலை செய்தனர்.

அதன்பின்னர் தடயங்களை அழிக்க விரும்பிய ராதா மற்றும் சுபாஷ் ஆகியோர் , இறந்த ராகேஷ் உடலை பல துண்டுகளாக வெட்டி, ரசாயனத்தை பயன்படுத்தி பிணத்தை கரைக்க முயன்றுள்ளனர்.

ஆனால், ரசாயனம் பயன்படுத்தியதால், திடீரென்று வெடித்து உடல் பாகங்கள் தீப்பற்றியுள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக ஏதோ தீ விபத்து என்று எண்ணி பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து விரைந்து வந்த பொலிசார், அந்த வீட்டின் உள்ளே சிதறி கிடந்த சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக அந்த உடல் பாகங்களை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணயில், ராகேஷ் பீகாரில் தடை செய்யப்பட்ட ம.து.வை சட்டவிரோதமாக வியாபாரம் செய்து வந்துள்ளார்.

இதன் காரணமாக பொலிஸார் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதால், அவர் பெரும்பாலும் இரகசியமாகவே வாழ்ந்து வந்துள்ளார். அந்த நேரத்தில், ராகேஷின் கூட்டாளியான சுபாஷ் தான் ராகேஷின் மனைவியை கவனித்து வந்துள்ளார்.

அப்போது தான் இவர்கள் இருவருக்குள் காதல் வந்துள்ளது. அதன் பிறகு, ராதா, அவளது காதலனுடன் சேர்ந்து, ராகேஷை கொ.லை செய்ய முடிவு செய்துள்ளார். இதற்கு ராதாவின் சகோதரியும் அவரது கணவனும் கூட்டு சேர்த்துள்ளனர்.

திட்டமிட்டபடி ராகேஷை ராதா வீட்டிற்கு அழைக்க, ராகேஷ் வீட்டிற்குள் வந்தவுடன், சுபாஷின் உதவியுடன் அவரைக் கொன்றுவிட்டு, உடலை துண்டுதுண்டாக வெட்டி ரசாயனம் ஊற்றி அழிக்க முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட வெடிசத்தம் காரணமாக மாட்டிக் கொண்டது தெரியவந்தது.