யாழில் வெளிநாடு செல்ல இருந்த பெண்ணொருவர் கொரோனாவால் பரிதாபமாக உயிரிழப்பு!!

1499

யாழில்..

யாழில் கோவிட் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ். வடமராட்சி, நவிண்டிலை சேர்ந்த தவேந்திரன் துளசிகா (வயது 37) எனும் குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த பெண் சில வாரங்களுக்கு முன்னர் கோவிட் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் உயிரிழந்த பெண் வெளிநாட்டிலுள்ளவரை திருமணம் செய்துள்ள நிலையில், மிக விரைவில் வெளிநாடு செல்ல இருந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.