வவுனியாவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி திறந்திருந்த 5 வர்த்தக நிலையங்கள் தனிமைப்படுத்தல்!!

2134

வர்த்தக நிலையங்கள்..

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மற்றும் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி செயற்பட்டதாக பிரபல சுப்பர் மாக்கட் உட்பட 5 வியாபார நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டன.

கொரோனா தொற்று வவுனியாவில் தொடர்ந்தும் நீடித்து வரும் நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படல் மற்றும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாது செயற்படல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் வவுனியாவில் விசேட சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை ஒன்றினை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, சுகாதார அறிவுறுத்தல்களை மீறி மக்களை ஒன்றுகூட்டி வியாபாரத்தில் ஈடுபட்டட வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டன.

அந்தவகையில், மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் உள்ள பிரபல சுப்பர் மார்க்கட், தர்மலிங்கம் வீதியில் இலத்திரனியல் விற்பனை நிலையம், குருமன்காடு பகுதியில் சுப்பர் மார்க்கட் ஒன்று, ஹொரவப்பொத்தானை வீதியில் இரு வர்த்தக நிலையங்கள் என 5 வர்த்தக நிலையங்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டன.