வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உப தவிசாளருக்கு கொரோனா தொற்று!!

1150

கொரோனா..

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உப தவிசாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று தவிசாளர் யோகராஜா தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அமர்வில் கலந்து கொள்ள வருகை தந்த சபை உறுப்பினர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த அன்டிஜன் பரிசோதனையில் சபை உப தவிசாளர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவரை தனிமைப்படுத்தவும், அவருடன் தொடர்பினை பேணியவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.