வவுனியாவில் சுகாதாரப் பிரிவினர் திடீர் சுற்றிவளைப்பு : திறந்திருந்த வர்த்தக நிலையங்களுக்கு எச்சரிக்கை!!

1654

திடீர் சுற்றிவளைப்பு..

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மற்றும் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி செயற்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்ததுடன் வர்த்தக நிலையங்களை மூடுமாறு தெரிவித்துள்ளனர்.

கோவிட் பரவல் வவுனியாவில் தொடர்ந்தும் நீடித்து வரும் நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படல் மற்றும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாது செயற்படல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் வவுனியாவில் விசேட சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை ஒன்றினை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது சுகாதார அறிவுறுத்தல்களை மீறி மக்களை ஒன்றுகூட்டி வியாபாரத்தில் ஈடுபட்டட வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் எச்சரிக்கை விடுத்துடன் நாடமாடி பொருட்களை விநியோகம் மேற்கொள்ளுமாறும் தெரிவித்தனர்.

அத்துடன் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டதுடன் மீண்டும் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டால் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.