இலங்கையில் முதலாம் திகதிக்கு பின்னர் முடக்கம் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்!!

2963

முடக்கம் தொடர்பில்..

அக்டோபர் முதலாம் திகதிக்கு பின்னர் “புதிய வழமைக்கு திரும்புதல்” என்ற அடிப்படையில் கட்டம் கட்டமாக நாட்டை திறப்பதற்கு அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி நாட்டை திறக்கும் போது விதிக்கப்பட வேண்டிய சுகாதார ஒழுங்குவிதிகள் மற்றும் திட்டங்கள் தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருகின்றன.

நேற்றைய தினம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) தலைமையில் நடைபெற்ற கோவிட் தடுப்பு செயலணிக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.