மூன்று வாரங்களாக பால்மாவுக்கு தட்டுப்பாடு : பெரும் சிரமங்களை எதிர்நோக்கும் மக்கள்!!

804

பால்மா..

சந்தையில் மூன்று வாரங்களாக காணப்படும் பால்மா தட்டுப்பாடு காரணமாக நுகர்வோரான மக்கள் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். பால்மா விலைகளை அதிகரிக்கக்கோரி இறக்குமதி நிறுவனங்கள் பால்மாவை சந்தைப்படுத்தாமல் இருப்பது இந்த தட்டுப்பாட்டுக்கு காரணம்.

குறிப்பாக குழந்தைகள் இருக்கும் குடும்பங்கள் இதனால், பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர். வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பால்மா சந்தைக்கு வந்தாலும் வர்த்தகர்கள் அவற்றை விற்பனை செய்யும் போது விதிக்கும் நிபந்தனைகள் காரணமாக மக்கள் சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாகக் கூறப்படுகின்றது.

பால்மாவை தவிர சில பிரதேசங்களில் சீமெந்து, சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.