மேலும் கட்டுப்பாடுகள் : நாட்டை திறப்பது குறித்து சுகாதார அமைச்சரின் அறிவிப்பு!!

1962

மேலும் கட்டுப்பாடுகள்..

நாட்டை திறப்பது குறித்த தீர்மானம் இம்மாதம் 30ஆம் திகதியே எடுக்கப்படுமென இலங்கையின் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.

இதன்போது சில கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளாார். அத்துடன் நாடு திறக்கப்பட்டதன் பின்னர் சுகாதார விதிமுறைகளை முறையாக பேணுமாறும் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த மாதம் (21.08) அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் ஒக்டோபர் 1ம் திகதி அதிகாலை 4.00 மணியளவில் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளபோதும், இறுதி முடிவு வரும் 30 ம் திகதியே வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.