தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படுகிறது : வெளியான அதிரடி அறிவிப்பு!!

3139

ஊரடங்கு..

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படவுள்ளது. இதன்படி எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படவுள்ளதாக,



இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதற்கான அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்தமாதம் 21ம் திகதி (21.08.2021) முதல் தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம் (01.10.2021) வெள்ளிக்கிழமை முதல் நீக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.