ஏரிக்கரையில் கிடந்த 21 வயது இளம்பெண்ணின் சடலம் : பொலிசார் கண்ட அதிர்ச்சிக் காட்சி!!

1121

தமிழகத்தில்..

தமிழகத்தில் வேலைக்கு சென்ற இளம்பெண் ஏரிக்கரையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரை அடுத்த மப்பேடு அருகே உள்ள நரசமங்கலம் காலனி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகள் ஜெயஸ்ரீ (21).

இவர் பி.பி.ஏ. பட்டப்படிப்பு முடித்துவிட்டு காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 24-ந் திகதி வேலைக்குச் சென்ற ஜெயஸ்ரீ மீண்டும் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பதறிப்போன அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதற்கிடையே நேற்று முன்தினம் நரசமங்கலம் பகுதியிலுள்ள ஏரிக்கரையில் பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக ஜெயஸ்ரீயின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர்.

அப்போது அங்கு அவர்கள் சென்று பார்த்த போது அங்குள்ள முட்செடியில் துப்பட்டாவால் ஜெயஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைத்தனர். அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஜெயஸ்ரீயின் உடலை கண்டு கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

பின்னர் பொலிசார் இளம்பெண்ணின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஜெயஸ்ரீயின் பெற்றோர், தங்கள் மகள் மரணத்தில் அவர் காதலித்துவந்த நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த இளவரசன் என்ற இளைஞர் மீது சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தனர்.

அதையடுத்து, சந்தேகத்தின் பேரில் இளவரசனை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்த மப்பேடு பொலிசார் அவரை அழைத்து விசாரணை மேற்கொள்ளத் திட்டமிட்டனர்.

அதேபோல், இளம்பெண்ணின் உடலில் சில இடங்களில் காயங்கள் இருந்ததோடு, வேலைக்குச் செல்லும்போது அவர் எடுத்துச் சென்ற செல்போன், பணப்பை உள்ளிட்ட பொருள்கள் சம்பவ இடத்தில் இல்லாததும் பொலிசாருக்கு அதிர்ச்சியை கொடுத்தது, இதையடுத்து சந்தேக மரணம் என்ற அடிப்படையில் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

இதற்கிடையில், பொலிசார் தன்னைத் தேடி வரும் தகவலறிந்து, இளவரசன் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், உயிரிழந்த ஜெயஸ்ரீயின் தந்தை சுந்தரமூர்த்தி மப்பேடு காவல் நிலையத்தில், தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டிருப்பதாகத் தாங்கள் சந்தேகிப்பதாகப் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து காதல் விவகாரத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.