யாழில் பிறந்து ஒரு மாதமேயான குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு!!

856

யாழில்..

யாழ். பருத்தித்துறையில் பிறந்து ஒரு மாதமேயான குழந்தையொன்று நேற்றைய தினம் உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தையின் தாய்க்கு கடந்த 22ஆம் திகதி கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், குழந்தை வீட்டில் வைத்தே உயிரிழந்த நிலையில் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குழந்தையின் சடலம் மீதான பி.சி.ஆர் பரிசோதனையின் பின் குழந்தைக்கு கோவிட் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குழந்தையின் மரணம் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டிருந்தார். இதனையடுத்து இன்றைய தினம் சட்ட வைத்திய அதிகாரி விசாரணைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.