ஒபாமாவை கொல்ல முயன்றவருக்கு 25 ஆண்டுகள் சிறை!!

663

Jailஅமெரிக்காவில் வாஷிங்டன் நகரை சேர்ந்த ஆஸ்கர்ரமரோ ஒர்டெகா– ஹெர்னான்டஸ் (30), கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார்.

எனவே அவரை கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது ஜனாதிபதி ஒபாமாவை கொலை செய்யும்படி கடவுள் தன்னிடம் கூறியதாக அவரது நண்பர்களிடம் கூறியது தெரியவந்தது.

எனவே அவன் ஒபாமாவை கொலை செய்ய முயன்றதாக பொலிசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு வாஷிங்டன் பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒர்டெகா– ஹெனாண்டசுக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்தது.

முன்னதாக இவருக்காக வாதாடிய வக்கீல்கள் இவர் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் எனவே 10 ஆண்டுகள் சிறையில் தண்டனை வழங்கும்படியும் கேட்டுக் கொண்டனர். ஆனால் அதை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார்.