அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதிக்கான நிர்மாணப் பணிகள் நிறைவுக் கட்டத்தில்!!

674

அதிவேக நெடுஞ்சாலை..

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமவிலிருந்து பொதுஹெர வரையான பகுதியில் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்து வருகின்றன.

குறித்த வீதியின் நுழைவாயில் கம்பஹா மாவட்டத்தின் மீரிகமவில் இருக்கும், வெளியேறும் இடம் குருணாகலில் இருக்கும். மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

கண்டி, குருணாகல் மற்றும் தம்புள்ளைக்கு பயணம் செய்பவர்களுக்கு இந்த அதிவேக நெடுஞ்சாலை மிகவும் வசதியாக இருக்கும்.