வவுனியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை : மூன்று பேர் மரணம்!!

1544

கொரோனா..

வவுனியாவில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன், மூவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (30.09.2021) இரவு வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக வவுனியாவில் நேற்றைய தினம் (30.09.2021) மூவர் மரணமடைந்துள்ளனர். பெரியார்குளம் பகுதியைச் சேர்ந்த (வயது 66) பெண் ஒருவரும், கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த (வயது 69) பெண் ஒருவரும், பூம்புகார் பகுதியைச் சேர்ந்த (வயது 78) பெண் ஒருவரும் என மூவர் மரணமடைந்துள்ளனர்.

மரணமடைந்தவரின் சடலத்தை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.