வீட்டு வேலை செய்து வந்த 21 வயது தமிழ்ப் பெண்ணுக்கு நடந்த கொடூரம்!!

948

லட்சுமி..

டெல்லியில் தமிழ்ப்பெண் ஒருவர் குளியலறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி லஜ்பத் நகரில் அழகு நிலையம் நடத்தி வருபவரின் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த லட்சுமி (21).

இவர் அந்த வீட்டின் குளியல் அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அதன்படி வேலை செய்து வருபவரின் வீட்டின் குளியல் அறையில், பாதி எரிந்த நிலையில் சடலமாக லட்சுமி கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

லட்சுமியின் சடலத்தை பொலிசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். பிரேத பரிசோதனையின் அறிக்கைக்குப் பின் தான் முழுமையான விவரம் தெரியவரும்.

அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில், லட்சுமி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் டெல்லி வாழ் தமிழர்கள் ஒன்றாகக் கூடி இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியில் போ.ராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.