பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி வெளியானது!!

2110


பாடசாலைகள்..



பாடசாலைகளை திறப்பது குறித்து மாகாண ஆளுனர்கள் தீர்மானம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதன்படி எதிர்வரும் 21ம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கு மாகாண ஆளுனர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.



200 மாணவர்களுக்கு குறைந்த ஆரம்ப் பிரிவு பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாண சபைகளின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாடசாலைகள் இவ்வாறு திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.




குறைந்தளவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை முதலில் ஆரம்பிப்பதற்கான இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் கல்வி அமைச்சருக்கும், மாகாணசபை ஆளுநர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

200இற்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு வகுப்புகளையும், 100 மாணவர்களை விட குறைவான பாடசாலைகளின் எல்லா வகுப்புகளையும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல அளவுகோல்களின் கீழ் 3,000 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.