வவுனியாவில் விசேட தேவையுடையோருக்கு பைஸர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்!!

1860


தடுப்பூசி..



வவுனியாவில் 12- 19 வயதிற்குட்பட்ட விசேட தேவையுடையோருக்கு பைஸர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.



அதன் ஒரு கட்டமாக வவுனியா மாவட்டத்தில் விசேட தேவைக்குட்பட்ட 12 – 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான பைஸர் தடுப்பூசி ஏற்றும் பணி வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று (05.10) முன்னெடுக்கப்பட்டது.




விசேட தேவைக்குட்பட்ட 60 பேருக்கு குறித்த பைஸர் தடுப்பூசிகள் முதல் கட்டமாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.