இலங்கையில் மீண்டும் பயணக்கட்டுப்பாட்டை அமுல்படுத்துவது குறித்து ஆலோசனை!!

1895

பயணக்கட்டுப்பாடு..

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பயணக்கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டை திறந்த பின்னர், முடிவடையும் சில வாரங்கள் குறித்து ஆராய்ந்த பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதை நிலைமையில், கோவிட் வைரஸ் தொற்று நோய் மீண்டும் அதிகரித்தால் அது கட்டுப்படுத்த முடியாத மட்டத்திற்கு செல்லலாம் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் கூறியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி இறுதியாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதுடன் அது சில தடவைகள் நீடிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த தனிமைப்படுத்தல் ஊரடங்கானது கடந்த முதலாம் திகதி நீக்கப்பட்டதுடன் நாடு வழமை போல் திறக்கப்பட்டது. எனினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-