சகோதரனுக்கு திருமண நிகழ்வு : சடலங்களாக மீட்கப்பட்ட இளம் தம்பதி!!

1271

இளம் தம்பதி..

கம்பஹா, மீரிகம பிரதேசத்தில் இளம் தம்பதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீரிகம, லின்தர பிரதேசத்தில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்கள் 26 வயதுடைய கணவன் மற்றும் 23 வயதுடைய மனைவி என தெரியவந்துள்ளது.

பெண்ணின் கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்த நிலையில் அவரது உடல் கீழே இறங்கிய நிலையில் காணப்பட்டுள்ளதுடன் அருகில் கணவனின் உடல் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுளளனர்.

சடலங்கள் தொங்கிய இடத்தில் இருந்த பத்திரிகையில் “குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள் தம்பி”என கணவனால் எழுதப்பட்டிருந்ததனை அவதானிக்க முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற நிலையில் அவர்களுக்கு 4 வயதில் மகன் ஒருவர் உள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சகோதரனின் திருமணம் நடைபெறுவதால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அங்கு சென்றுள்ள போதிலும் அந்த பெண் மட்டும் வீட்டில் இருந்தார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. திருமணத்திற்கு சென்ற கணவர், தங்களின் 4 வயது மகனை திருமண வீட்டில் விட்டு விட்டு வீடு திரும்பியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த வீட்டில் பிற்பகல் வேளையில் யரோ முனங்குவது போன்று சத்தம் கேட்பதாக பொலிஸாருக்கு அயலவர்கள் வழங்கிய தகவலுக்கமைய பொலிஸார் அவ்விடத்திற்கு சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.