திருமணமாகி 4 மாதத்தில் கணவனுக்கு நடந்த விபரீதம் : வசமாக சிக்கிய மனைவி!!

658


புதுக்கோட்டை..



புதுக்கோட்டை மாவட்டத்தில் கணவனை கொலை செய்து கிணற்றில் வீசிய மனைவியை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள போரம் கிராமத்தில் வசித்து வருபவர் பாண்டித்துரை.



இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நந்தினி என்ற பெண்ணுக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த புது தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.




இதையடுத்து கடந்த 20ஆம் தேதியில் இருந்து பாண்டியனை காணவில்லை என்பதால் அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் பொலிஸ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.


அந்த வகையில் நந்தினியை பொலிஸ் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீஸ் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், கணவனை கொன்று கிணற்றில் வீசியதாக நந்தினி கூறியதை கேட்டு பொலிஸ் அதிர்ச்சியடைந்தனர். கடந்த 20ஆம் தேதி கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் பாண்டியன்துரை மனைவியின் கழுத்தை நெரித்துள்ளார்.


இதனால் கோபமடைந்த நந்தினி கத்தியை எடுத்து கணவனை குத்தி கொலை செய்துள்ளார். இதனால் செய்த கொலையை யாருக்கும் தெரியாமல் மறைக்க கணவரின் சடலத்தை வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் வீசியுள்ளார்.

பிறகு கணவர் காணவில்லை என்று கூறி நாடகமாடியுள்ளார். இதையடுத்து நந்தினி கூறிய கிணற்றில் இருந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நந்தியை பொலிஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.