யாழ் குடும்பப் பெண் சுவிஸ்லாந்தில் பரிதாபகரமாக உயிரிழப்பு!!

2091

பிரசாந்தன் டிலுசியா..

சுவிஸ்லாந்து லுட்சேர்ன் மாநிலத்தில் வசித்து வந்த யாழ் இளம் குடும்பப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார், லூட்சர்ன் மாநில மாவட்ட வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வழமைக்கு திரும்பிய போது திடீரென உயிரிழந்தார்.

திருமணம் செய்து இரண்டு வருடங்களான நிலையில் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த போது இத் துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

யாழ் சுன்னாகத்தை சேர்ந்த பிரசாந்தன் டிலுசியா வயது 30 என்ற இளம் பெண்ணே இவ்வாறு பரிதபமாக உயிரிழந்தார் இச் சம்பவம் லுட்சர்ன் வாழ் தமிழ் மக்கள் மத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.