வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்!!

1861

விபத்து..

மதவாச்சி – மன்னார் பிரதான வீதியில் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இன்று (07.10.2021) காலை 11 மணியளவில் செட்டிக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வாகனம் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். இவ் விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

செட்டிக்குளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி (மதவாச்சி – மன்னார் பிரதான வீதியூடாக) கார் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தினை அண்மித்த பகுதியில் கார் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியினை விட்டு கீழிறங்கி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் காரின் சாரதி மற்றும் செட்டிக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளானதுடன் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.